உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி திருவிழா

ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி திருவிழா

நத்தம் : நத்தம் அருகே உலுப்பகுடி வேட்டைக்காரன் சுவாமி கோயில் கறி திருவிழாவில் 40 கிடாய்கள் வெட்டி விடியவிடிய நடந்த விருந்தில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவிற்காக கிராம மக்களால் ஆடுகள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும். அவை பலியிடப்பட்டு அசைவ விருந்து படைக்கப்படும். இந்தாண்டிற்கான கறி திருவிழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பொங்கல் வைக்க வழிபாடு துவங்கியது. இதன் பின் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 40 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூடை அரிசியில் சாதம் வைத்து கறி விருந்து நடந்தது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அசைவ உணவை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை