உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல், : -கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நேற்று சுற்றுலா பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர்.தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு,குளு நகரான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் நேற்று வருகை தந்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலாத்தலங்களை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் மாலை கோடை வெயிலுக்கு மத்தியில் சிறிது நேரம் மிதமான மழை பெய்தது பயணிகளுக்கு சற்று ஆறுதல் தந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !