உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்மாயில் கழிவுகள் அகற்றம்

கண்மாயில் கழிவுகள் அகற்றம்

செம்பட்டி : திண்டுக்கல் -குமுளி ரோட்டில் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் அமைந்துள்ளது. மழையால் நிரம்பி மறுகால் செல்கிறது. இப்பகுதியினர் மட்டுமின்றி இத்தடத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களும் இங்கு நீராடுவதை குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோர் தங்களது பழைய துணிகளை, கண்மாயின் மறுகால் பகுதியில் வீசி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. இச்சூழலில் கண்மாய் பகுதியில் குவியும் கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டனர். மறுகால், கரை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து கிடந்த பழைய துணிகள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை