உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்

 பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச. 8ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் நவ.5 ல் நடந்த நிலையில் யாகசாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைதொடர்ந்து மூலவர் சன்னதி விமான கலசம், ராஜகோபுர விமான கலசங்கள் உட்பட பிரகார விமான கலசங்கள் என 19 கலசங்கள் டிச.1 அன்று பொருத்தப்பட்டன. யாகசாலையில் வைக்கக்கூடிய குடங்களுக்கு நுால் சுற்றி அழகு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்னதானம் கூடமும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை