உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மதுரை ‛வைகையை முந்தாமல் நெல்லை ‛வந்தே பாரத்க்கு நேரம் திருச்சி-- திண்டுக்கல் ரயிலுக்கும் உதவும்

 மதுரை ‛வைகையை முந்தாமல் நெல்லை ‛வந்தே பாரத்க்கு நேரம் திருச்சி-- திண்டுக்கல் ரயிலுக்கும் உதவும்

வடமதுரை: சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஓவர்டேக் செய்யாத விதத்தில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு புதிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி - திண்டுக்கல் பயணி ரயிலின் தாமதம் தவிர்க்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து தற்போது மதியம் 1:45 மணிக்கு புறப்படும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஜன., 1 முதல் மதியம் 1:15 மணிக்கே புறப்படுகிறது. சென்னை எழும்பூரில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இனி மதியம் 3:05 மணிக்கு புறப்படும். இந்த நேர மாற்றத்தின் மூலம் சென்னை -மதுரை வைகை ரயில் வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட இடைப்பட்ட ஸ்டேஷனில் ஒதுங்கி நிற்க வேண்டியிருக்காது. சென்னையில் புறப்பட்டு காத்திருப்பு ஏதுமின்றி மதுரை சென்றடையும். இந்த நேர மாற்றத்தின் பலன் திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயிலுக்கும் கிடைக்கிறது. தற்போது வைகை, வந்தே பாரத் என இரு எக்ஸ்பிரஸ்களுக்கு வழிவிட அதிக நேரம் இடைப்பட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிறுத்தப்படும். இனி இந்த ரயில் வைகைக்கு மட்டும் வழிவிட்ட பின்னர் விரைவாக திண்டுக்கல் சென்றடைய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை