கந்தசஷ்டி கவசம் பாராயணம்
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவிகள் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி, ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி , பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோயில்களில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வருகின்றனர். அதன்படி பழநி முருகன் கோயில், திரு ஆவினன்குடி கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது.