உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நத்தம் : நத்தம் அருகே செந்துறை சாலையில் உள்ளது புதுப்பட்டி ஊராட்சி. இந்த பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. நேற்று சாலையோர ஆக்கிரமிப்பில் இருந்த 2 வீடுகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் சரவணன், - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட நெடுஞ்சாலைதுறையினர், போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ