உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

ஈரோடு : அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, குரலிசை, கருவியிசை, பரத நாட்-டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில், ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் போட்டி நடந்தது. இதில் கோவை மண்டல கலை பண்பாட்டு மையத்துக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். குரலிசையில் முதல் மூன்று இடங்கள் முறையே திரிஷா, சுமித்ரா, ஜெயராமன் பிடித்தனர். இதேபோல் கருவியிசையில் திருவேங்கடசாமி, சாகேத்ராம், ராகவேந்திரன்; பரத நாட்டியத்தில் ஜெய்ஷா, குணவதி, அநித்யா; கிராமிய நட-னத்தில் ஜெகதீஸ்வரன், ஜீவலதா, திவ்யபாரதி; ஓவியத்தில் பவித்ரா, காருண்யா, ஜெயராமன் ஆகியோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முதல் பரிசாக தலா, 6,000 ரூபாய், 2ம் பரிசாக தலா, 4,500 ரூபாய், 3ம் பரிசாக தலா, 3,500 ரூபாய்க்கான காசோலை, பொன்னாடைகளை டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வழங்-கினார். கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்-குனர் நீலமேகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்