உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு

5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு

ஈரோடு : வங்கியாளர்கள் கல்வி கடன் வழங்குவது குறித்து கல்லுாரி நிர்-வாக ஒருங்கிணைப்பாளர், மாணவ, மாணவியருக்கு பயிற்சி மற்றும் கலந்தாலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது.இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் பெற தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களை, வித்யாலட்சுமி, ஜன்சமர்த் ஆகிய இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை பற்றி, கல்லுாரி நிர்வா-கத்துக்கும் பயிற்சி தரப்படும்.ஈரோடு மாவட்டத்தில் நடப்பு, 2024-25ம் கல்வி ஆண்டில், 5,000 மாணவ, மாணவியருக்கு, 70 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ