உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

சத்தியமங்கலம், தாளவாடி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 42. இவர் நேற்று, வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களாக, தாளவாடி பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ