உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் பேவர் பிளாக் தரைத்-தளம் திறப்பு, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா, இலக்-கிய மன்ற துவக்க விழா என முப்பெரும் விழா நடந்தது. பி.டி.ஏ., தலைவர் சென்னிமலை தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஸ்மார்ட் வகுப்பறை, பேவர் பிளாக் தரைத்தளத்தைம் திறந்து வைத்தார். பள்ளியில் பொதுத்தேர்வு-களில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, -மாணவியருக்கு கேடயம், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சத்தியில் நடந்த குறு-மைய கேரம் விளையாட்டு போட்டியில் முதலாவது, இரண்டா-வது இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்-பட்டது.இலக்கிய மன்ற விழாவில், கோவை தனியார் கலை கல்லுாரி, தமிழ்துறை உதவி பேராசிரியர் ராமபரிமளம் சிறப்பு அழைப்பாள-ராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்கள், பள்ளி தலை-மையாசிரியர் சிவசுப்ரமணியன், முன்னாள் தலைமையாசிரியர் வேதநாயகம், பிடிஏ நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ--மாண-வியர் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை