உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜவுளி வியாபாரி வீட்டில் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

ஜவுளி வியாபாரி வீட்டில் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

ஈரோடு: ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து, 3.5 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.ஈரோடு, நாடார் மேடு, அண்ணாதுரை வீதியை சேர்ந்தவர் பர்கத் பாவா, 28, ஜவுளி வியாபாரி. வாடகை வீட்டில் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். கடந்த, 2ல் பர்கத் பாவா குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டு முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.வீட்டுக்குள் சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3.5 பவுன் நகை,2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை