உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் வீடுகளின் மீது கற்களை வீசியவர் கைது

கோபியில் வீடுகளின் மீது கற்களை வீசியவர் கைது

கோபி, கோபி அருகே அக்கரை கொடிவேரி பகுதியில், ஒரு வாரமாக நள்ளிரவில் வீடுகள் மீது கற்கள் வீசும் சம்பவம் நடந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பிரேமா என்பவர் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. இதுகுறித்து பிரேமா கொடுத்த புகாரின்படி, அதே பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ், 38, என்பவரை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி