| ADDED : ஜூலை 29, 2024 01:20 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட கட்டட பொருட்கள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நாரா-யணசாமி, செயலாளர் பாலு முன்னிலை வகித்தனர். பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். ஆண்டறிக்-கையை இணை செயலாளர் குமார் சமர்ப்பித்தார். சிறப்பு அழைப்-பாளராக மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார் கலந்து கொண்டார். கட்டட கட்டுமான பொருட்களின் மீது பல்வேறு சதவீதமான ஜி.எஸ்.டி வரியை, ஒரே மாதிரியாக 5 சதவீதமாக குறைக்க மத்-திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு-மேட்டூர் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட தியேட்டர் உள்ளதால் கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து நெரிசல் அதிக-ரித்தபடியே செல்கிறது. எனவே மேட்டூர் சாலையில் கனரக வாக-னங்களுக்கு ஒரு வழிப்பாதையாகவும், இரு சக்கர வாகனங்க-ளுக்கு மட்டும் இரு வழிப்பாதையாக மாற்ற எஸ்.பி., நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.