உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்

பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி முதலாவது வார்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரகாஷ், 38; நேற்று காலை குழந்தைகளை பள்-ளிக்கு அனுப்பி விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். நண்பகல், 12:00 மணி அளவில் வீட்டில் இருந்து புகை வந்தது.அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற காங்கேயம் தீய-ணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கட்டில், பீரோ, மரச்சாமான்கள் மற்றும் கூரை இடிந்தும், எரிந்தும் சேதமானது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகின. புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !