உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்

குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்

கோபிசெட்டிபாளையம் :கோபி சீதாலட்சுமிபுரத்தில் குப்பை தொட்டியில் திடீரென தீ பரவியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மக்கள் அவதிப்பட்டனர். சீதாலட்சுமிபுரம் நான்காவது வீதியில் நகராட்சி குப்பை தொட்டி உள்ளது. ஒரு மாதமாக குப்பையை அகற்றவில்லை. தொட்டி நிரம்பி, குப்பை சிதறி கிடக்கிறது. நேற்று காலை குப்பைத்தொட்டியில் திடீரென தீப்பிடித்து கொண்டது. தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமும், கடும் துர்நாற்றமும் பரவியது. மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். உடனுக்குடன் குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை