உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் மனு

வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் மனு

பவானி: மேட்டூர் அணை மேற்கு கரை வாய்க்காலில், அதிக அளவு கழி-வுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை கோரி, மேட்டூர் மேற்கு கரை கால்வாய் நீர் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசா-யிகள், பவானி தாசில்தார் தியாகராஜிடம், நேற்று மனு கொடுத்-தனர். மனு விபரம்: பவானி புறநகர் பகுதியான குருப்பநாயக்கன்-பாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் அதிகம் கலக்கிறது. இதனால் பாசன வாய்க்காலில் துர்நாற்றம் வீசுகிறது. கடைமடை பகுதியில் வாய்க்காலுக்குள் கான்கிரீட் கால்வாய் கட்-டப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளின் கழிவுநீர் வெளியேறும் சாக்-கடையாக மாற்றப்பட்டுள்ளது. வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நட-வடிக்கை இல்லை. எதிர்காலத்தில் பாசன கால்வாய் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாயாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. எனவே கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை