குட்கா மளிகை கடைக்கு அபராதம்
ஈரோடு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனையை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். ராசாம்பாளையம், மாணிக்கம்பாளையம் பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாணிக்கம்பாளையம் வசந்தம் மளிகை கடையில், 600 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கன்னிகுமாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.