உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.4,600க்கு விற்பனை

வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.4,600க்கு விற்பனை

புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கிடையே முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், மல்லிகை பூ தேவை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ, 2,700 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ, நேற்று 4,600 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், 1,000 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ கிலோ 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ, 50 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை