உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியையிடம் நகை பறிப்பு

ஆசிரியையிடம் நகை பறிப்பு

ஈரோடு : ஈரோடு, திண்டல், பாலாஜி கார்டன், சவுரி ராஜன் மனைவி பரிமளா, 54, தனியார் பள்ளி ஆசிரியை. வீட்டருகேயுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் இரவு, 7:30 மணிக்கு மொபட்டியில் சிவன் நகர் அருகே சென்றார். பல்சர் பைக்கில் பின் தொடர்ந்த ஹெல்மெட் அணிந்த இரு வாலிபர்கள், பரிமளா போட்டிருந்த ௨ பவுன் தங்க சங்கிலியை இழுத்து பறித்து செல்ல முயன்றனர். அப்போது நகை பாதி அறுந்து ஹெல்மெட் வாலிபர்கள் கைக்கு போனது. மீதியை பரிமளா பிடித்து கொண்டார். வாலிபர்கள் மின்னலாக பறந்து விட்டனர். புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ