உள்ளூர் செய்திகள்

சூதாடிய 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கனியாமூர் அய்யனார் கோவில் அருகே, அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பெரியசாமி,69; ராமலிங்கம் மகன் பெருமாள்,65; மணிகண்டன் மகன் கவியரசன்,26; சக்திவேல் மகன் சிவக்குமார்,26; ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.160 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி