உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு

போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே குடிபோதையில் தாக்கிக் கொண்டு 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் மணிகண்டன், 34; அதே ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றார். அங்கு துறிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், 42; என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது அவர்களுக்கிடையே போதையில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மது பாட்டில்களால் தாக்கிக் கொண்டர்.இருவரும் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், இளங்கோவன் ஆகிய இருவர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்