உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதட்சணை கேட்டு டார்ச்சர் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு டார்ச்சர் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி, வீட்டுவிட்டு துரத்திய கணவர் உட்பட 3 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அந்தோணி. இவரது மனைவி ஜாக்லின் மேரி, 22; இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 11ம் தேதி, ஜாக்லின் மேரியிடம் வரதட்சணை கேட்டு கணவர் ஆரோக்கிய அந்தோணி மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.இதுகுறித்து ஜாக்லின் மேரி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் நேற்று, ஆரோக்கிய அந்தோணி மற்றும் மாமனார் லாரன்ஸ், மாமியார் செல்வராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை