உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 2 பெண்களிடம் செயின் பறிப்பு

2 பெண்களிடம் செயின் பறிப்பு

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி சரஸ்வதி, 35; நேற்று முன்தினம் இரவு புழுக்கத்தின் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் சரஸ்வதி அணிந்திருந்த 4 சவரன் தாலிச் செயினை மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.இதேபோல் அதி கிராமத்தைச் சேர்ந்த மோகன் மனைவி பானுப்ரியா, 24; துாங்கிக் கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயினை மர்ம நபர்கள் அறுத்துச் சென்றனர்.இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை