உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாளை 5 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்

நாளை 5 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 23ம் தேதி 5 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை 23ம் தேதி நடக்கிறது. 15 துறைகளைச் சேர்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த முகாம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் எலியத்துார், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஜம்பை, திருக்கோவிலுார் ஒன்றியத்தில் கொடியூர், திருநாவலுார் ஒன்றியத்தில் பாண்டூர், உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் பிடாகம் என ஊரகப் பகுதிகளில் நடக்கிறது.முகாமில் சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை