உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரின் காவல் வரும் 5ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 67 பேர் இறந்தார்.இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராயம் விற்ற மற்றும் மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சிவக்குமார், சின்னதுரை, ஜோசப், மெத்தனால் சப்ளையர்கள் கவுதம்சந்த், பன்ஷிலால், மாதேஷ், கதிரவன், கண்ணன், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகிய 15 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.இதனையடுத்து இவர்களின் காவலை நீட்டிக்க வேண்டி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதனையேற்ற மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம், கடலுார் மத்திய சிறையில் உள்ள 15 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்து அவர்களின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 5ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை