உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி: ஓடியந்தல் கிராமத்தில் புளி உளுக்குவதற்காக மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த ஓடியந்தலை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,55; இவர், நேற்று மதியம் 11.20 மணியளவில் தனது விளைநிலத்தில் உள்ள மரத்தில் ஏறி, புளி உளுக்கினார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை