உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

ரிஷிவந்தியம் : அரியலுார் சுடுகாடு அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நேற்று காலை 9.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அரியலுார் சுடுகாடு அருகே, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில் மகன் வேல்முருகன், 21; ராமசாமி மகன் ஆகாஷ், 19; ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 130 கிராம் கஞ்சாவை பகண்டைகூட் ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்