மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
திருக்கோவிலுாரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 38 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை காவல்துறை மேற்கொண்டுள்ளது.பொதுவெளியில் நடக்கும் குற்றங்களை முற்றிலுமாக தடுக்கும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய சி.சி.டி.வி., கேமராவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அப்படியே குற்றங்கள் நடந்தாலும் அதனை காட்டிக் கொடுக்கும் மூன்றாவது கண்ணாக இருக்கும் சி.சி.டி.வி., கேமராவை திருக்கோவிலூர் நகராட்சி முழுதும் பொருத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டிய முக்கியமான இடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 38 இடங்களில் 78 கேமராக்களை பொருத்துவது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.டி.எஸ்.பி., மனோஜ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலாஜி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை காவல்துறை தற்போது மேற்கொண்டுள்ளது.கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பதன் மூலம், நகரில் ஏற்படும் குற்ற சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025