உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வது சிறுவன். பிளஸ் 2 படித்து வரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மாலை சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று முத்தம் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை