உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது

சின்னசேலம்: லட்சியம் கிராமத்தில் இரண்டு பெண்களை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த லட்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி மனைவி பானுப்பிரியா, 33; இவரது தங்கை சத்யா, 24; தீபாவளி பண்டிகைகாக சத்யா தனது சகோதரி பானுப்பிரியா விட்டிற்கு வந்து தங்கினார். கடந்த 31ம் இரவு 8:00 மணிக்கு பானுப்பிரியா வீட்டிற்கு வந்த சத்யாவின் கணவர் காளியாப்பிள்ளை, 35; தகராறு செய்து சகோதரிகள் இருவரையும் கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் பானுப்பிரியா, சத்யா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, காளியாப்பிள்ளையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை