உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: இன்னாடு மலைகிராமத்தில் நடந்த மாற்றுத்திறளிகளுக்கான சிறப்பு முகாமில், 15 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. கல்வராயன்மலையில் இன்னாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் பரணீதரன், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் ஹெலன், காது மூக்கு தொண்டை டாக்டர் வாசவி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 15 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 3 மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு பரிந்துரைக்கப் பட்டனர். 21 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய் யப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை