உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு லீவ்

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு லீவ்

கள்ளக்குறிச்சி : திருவள்ளுவர் தினம், ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், தனியார் பார்கள் இயங்காது என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின் கீழ் , திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 16ம் தேதியும்; ராமலிங்கர் நினைவு நாள் வரும் 25ம் தேதியும்; 26ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் 3 நாட்கள் இயங்காது.மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை