உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பரிகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரிக்க சென்றனர். போலீசார் வருவதை பார்த்து, ஒருவர் தப்பியோடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது, 500 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.அவர்கள், காரனுார் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நிர்மல்ராஜ், 25; பரிகம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராமர், 24; என்பதும், தப்பியோடியது லட்சுமணன் மகன் மணிகண்டன் (எ) சிலம்பரசன் என தெரிய வந்தது. நிர்மல்ராஜ், ராமர் ஆகியோரை கைது செய்து, 500 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ