உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சங்கராபுரம் காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள்

 சங்கராபுரம் காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள்

சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் மக்கி வீணாகி வருவதால், வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் காவல் எல்லையில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விபத்து, சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்தல் போன்றவற்றில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை போலீசார் மீட்டு, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இதில் உரிய ஆவணங்கள் உள்ள வாகனங்கள் மட்டும் உரிமையாளர்கள் எடுத்து செல்கின்றனர். ஆவணம் இல்லாத வாகனங்களை எடுக்க அதன் உரிமையாளர்கள் வருவதில்லை. இதுபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்ய 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்கி வீணாகி வருகிறது. சங்கராபுரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ