உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆரோக்கியம், 30; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் புகைப்பட்டியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த போலீசார் ஆரோக்கியம் உடலை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை