உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்

விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்

ஆவடி : ஆவடி, ஜெ.பி.எஸ்டேட், சரஸ்வதி நகரில், நேற்று முன்தினம் 'ஜெட் ராடிங்' இயந்திரம் வாயிலாக பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது.இதில் ஈடுபட்டிருந்த, ஆவடி அருந்ததிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபி, 25, விஷ வாயு தாக்கி, பாதாள சாக்கடையினுள் விழுந்தார். ஆவடி தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது.இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல், கோபியை பாதாளச் சாக்கடை பணி மேற்கொள்ளச் செய்த ஒப்பந்த நிறுவனமான வி.பி.அசோசியேட்ஸ் நிறுவன உரிமையாளர், மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி, 50, மற்றும் மேற்பார்வையாளர் ஜெ.பி., எஸ்டேட்டைச் சேர்ந்த ஆனந்த் பாபு, 30, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதில், ரவி, ஆனந்த் பாபு ஆகியோரை, போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கோபியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை, நேற்று காலை ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், ஆவடி எம்.எல்.ஏ., நாசர், கோபியின் மனைவி தீபாவிடம் வழங்கினார். உடன், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி