மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
20 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
20 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
20 hour(s) ago
சென்னை : சென்னை, ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 32; ஓட்டுனர். அவரது மனைவி அபிராமி, 28. அவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு ஏழு வயது. இளையமகன் நிரஞ்சன் சாய்க்கு ஒரு வயது.இரு தினங்களுக்கு முன், மூத்த மகன், 'டிவி' சேனல் பார்த்தபடி, வேர்க்கடலை சாப்பிட்டுள்ளான். அப்போது, கீழே விழுந்த வேர்க்கடலையை, நிரஞ்சன் சாய் விழுங்கி உள்ளான். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.பெற்றோர், தி.நகரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தை இறந்துவிட்டது. குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago