மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி
1 hour(s) ago
கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
5 hour(s) ago
பருவமழை முன்பாகவே நிரம்பிய 8 ஏரிகள்
6 hour(s) ago
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
16-Oct-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 38; மாற்றுத்திறனாளி. நேற்று, பிரபு தன் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன், 60, என்பவரை பின்னால் அமர வைத்து கொண்டு, வாலாஜாபாத்- - ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாலாஜாபாத் மின் அலுவலகம் அருகே சென்றபோது, ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த சுதர்சன், 29, என்பவர், இயக்கி வந்த, 'பல்சர்' இருசக்கர வாகனத்தோடு மாற்றுத்திறனாளி பிரபுவின் வாகனம் மோதியது.இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாற்றுத்திறனாளி பிரபு உயிரிழந்தார். விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
16-Oct-2025