உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர் மோதல்: மாஜி தலைவர் பலி

டூ - வீலர் மோதல்: மாஜி தலைவர் பலி

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 62; அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர். நேற்று, 'பேஷன்' பைக்கில் ஸ்ரீபெரும்புதுார் சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது, பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த 'பல்சர்' பைக் வெங்கடேசன் மீது மோதியது.இதில், துாக்கி விசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பைக்கில் வந்த, சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 27, பலத்த காயம் ஏற்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ராஜேஷை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை