உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும், கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 21ல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், மின்வாரியம், வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை என பல்வேறு துறை சம்பந்தமான கோரிக்கை மற்றும் புகார்களை விவசாயிகள் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ