உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி வரதர் கோவில் தேர் தயார்படுத்தும் பணி துவக்கம்

காஞ்சி வரதர் கோவில் தேர் தயார்படுத்தும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள் வீதியுலா வருகிறார்.ஏழாம் நாள் பிரபல உற்சவமான வரும் 26ம் தேதி, காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, தேரின் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த தகடுகள் பிரித்து எடுக்கப்பட்டன.தேரின் கீழே இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. தேரின் மீது படிந்திருந்த துாசு, துகள்களை, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள், தேரில் முழு உயரத்திற்கும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து, தேரில் பல்வேறு அலங்காரம் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ