உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாமல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

தாமல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

தாமல்:காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் கிராமத்தில், திருமாலழகி நாயிகா சமேத தாமோதர பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது.வரும் 21ம் தேதி, காலை 5:00 மணிக்கு விஸ்வரூபமும், தொடர்ந்து புண்யாகவாசனம், உக்தஹோமம், கும்ப ஆராதனம், மஹாபூர்ணாஹூதி, யாத்ரா தானமும், கும்ப புறப்பாடும் நடைபெறுகிறது.காலை 10:30 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கும், பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு திருவாரா தனம், பிரம்மகோஷம், வேதப்ரபந்த சாற்றுமுறை, கோஷ்டி தீர்த்தமும், பிற்பகல் 12:30 மணிக்கு சர்வ தரிசனமும். மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 5:30 மணிக்கு பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை