| ADDED : ஜூலை 06, 2024 10:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் மேளா, வரும் 15ம் தேதி, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்பட உள்ளது.இம்முகாமில், தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை படித்த, இடைநின்ற மாணவர்களும் தொழில் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்று பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.