மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
16 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
16 hour(s) ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சி, சீட்டணஞ்சேரி கிராமத்தில், ரேஷன் கடை இல்லாததால், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்து வினியோகிக்கப்பட்டு வந்தன.இதனால், போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்கி வந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியானது.இதனிடையே, சீட்டணஞ்சேரியில் புதியதாக ரேஷன் கடை கட்ட ஒன்றிய பொது நிதியின் கீழ்,12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அதற்கான பணி துவங்கப்பட்டது.சில மாதங்களுக்கு முன், பணி நிறைவு பெற்றது.எனினும், அப்பகுதி தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியிலேயே ரேஷன் கடை தொடர்ந்து இயங்கியது.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, சீட்டணஞ்சேரி புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,சுந்தர், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
16 hour(s) ago
16 hour(s) ago