உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

சென்னை:சென்னையில் இயங்கி வரும் கேபா செஸ் அகாடமி சார்பில்,- மாநில அளவிலான 2ம் ஆண்டு, செஸ் போட்டி, மே 19ல் நடக்க உள்ளது. சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் இப்போட்டியில் 7, 9, 11, 13, 15, 17 ஆகிய வயதின் கீழ், இரு பாலருக்கு தனித்தனியாகவும் 'ஓபன்' பிரிவிலும் போட்டிகள் நடக்க உள்ளன.இதில், மொத்தம் 156 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, ஓபன் பிரிவில் 25,000 ரூபாய் ரொக்கப் பரிசும், சிறுவர், சிறுமியருக்கான பிரிவில், முதல் 10 இடங்களைப் பெறும் வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.தவிர, சிறப்பாக செயல்படும் மூன்று சிறுவர்கள் - சிறுமியர் மற்றும் ஓபன் பிரிவில் சிறப்பாக செயல்படும் பெண் வீராங்கனையருக்கு கோப்பைகள் வழங்கப்படும்.கூடுதல் விபரங்களுக்கு 94999 15932 மற்றும் 80560 57212 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கேபா செஸ் அகடாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை