உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரோபோட்டிக் சாம்பியன்ஷிப்பில் திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி சாதனை

ரோபோட்டிக் சாம்பியன்ஷிப்பில் திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி சாதனை

திருத்தணி : டெக்ராடியன்ஸ் ரோபோட்டிக் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி மும்பை ஐ.ஐ.டி.,யில் நடந்தது. இப்போட்டியில் தேசிய அளவில், பங்கேற்ற 60 பள்ளிகளில் திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பல கட்டங்களில் நடந்த போட்டியில், சக்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.தொடர்ந்து, முதல் பரிசுக்கான கோப்பையும், 20,000 ரூபாய் பரிசும் பெற்றனர். பள்ளி தாளாளர் டாமணிஜி, பள்ளி முதல்வர் நாகலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி