மேலும் செய்திகள்
கால்வாய் சாலையோரம் பள்ளம் மண் நிரப்பாததால் விபத்து அபாயம்
10 hour(s) ago
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
10 hour(s) ago
வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு
10 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சான்றிதழ்கள் பெறவும், நிலம் தொடர்பான பதிவேடு பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் கூரை விரிசலடைந்த, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது.இதனால், ஜன்னல், மின்விசிறி உள்ளிட்டவை விழும் நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.மேலும், மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் தண்ணீர் சொட்டுவதால், ஆவணங்கள் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.எனவே, பழுதடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago