உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடின்றி வீணாகும் பொது கழிப்பறை

பயன்பாடின்றி வீணாகும் பொது கழிப்பறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெரு கிழக்கு பகுதி, பழைய ரயில் நிலையம் அருகில், 10 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இப்பகுதியினரும், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை.இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை பழுது நீக்கி, கழிப்பறையை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை