| ADDED : மார் 28, 2024 09:50 PM
செங்கல்பட்டு:லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக, செங்கல்பட்டில் நேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.இதேபோல், மாவட்டம் முழுதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.